Home இலங்கை தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேட புறப்பட்டன…

தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேட புறப்பட்டன…

by admin

ஆய்வாளர் மு.திருநாவுகரசின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல்வெளியீடு இன்று(24) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன்    மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..

தமிழாய்வு மையம் இலங்கை- பிரித்தானியா ஆதரவில்
திரு. மு.திருநாவுக்கரசு அவர்களால் ஆக்கப்பட்டு வெளியிடப்படுகின்ற
பூகோளவாதம் புதியதேசியவாதம்
நூல் வெளியீடு
வீரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம்
24.02.2018 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்
பிரதம அதிதி உரை

இன்றைய இந்த நிகழ்வின் தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர் திரு.பா.செயப்பிரகாசம் அவர்களே, வாழ்த்துரை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் அருட்தந்தை து.நு. ஜெயசீலன் அவர்களே, அறிமுக உரைகளை வழங்கவிருக்கும் திரு ளு.ஜேசுநேசன் மற்றும் வு. சிறிதரன் அவர்களே,வெளியீட்டு உரையை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் தமிழ்த்துறை விரிவுரையாளர் க.அருந்தாகரன் அவர்களே, நூலாய்வை மேற்கொள்வதற்காக வருகை தந்திருக்கும் கலாநிதி மு.வு.கணேசலிங்கம் அவர்களே, கலாநிதி வு.கிருஷ;ணமோகன் அவர்களே, சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரன் அவர்களே, மற்றும் இங்கே வருகை தந்திருக்கின்ற சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே,துறைசார் ஆர்வலர்களே!

இன்றைய தினம் தமிழாய்வு மையம் இலங்கை – பிரித்தானியா ஆதரவுடன் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதி வெளியிடப்படுகின்ற பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற தலைப்புடன் கூடிய வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.அத்துடன் படித்தஅறிஞர்கள் மத்தியில் பேசவாய்ப்புகிடைத்ததையிட்டுமகிழ்வடைகின்றேன்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக என்னிடம் முற்கூட்டியே நேர ஒதுக்கீடு பெற்றுக்கொள்ளப்பட்ட போதும் 553 பக்கங்களைக் கொண்ட இந் நூல் எனது பார்வைக்காக நேற்று முந்தைய தினம்சேர்க்கப்பட்டுஒரு இரவு கால அவகாசம் மட்டுமே தரப்பட்டது. ஆகையால் இந் நூலைப் படிப்பதற்கு நேரம் போதவில்லை.நூலாய்வில் ஈடுபட்டிருக்கும் அறிஞர்கள் நூல் பற்றி நுணக்கமாகக் கூறுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் பிற அவசர கடமைகளையும் புரிய வேண்டிய சூழ்நிலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துஇந் நூலாசிரியர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களால் குறிப்பிடப்பட்ட விடயங்களின் சாராம்சத்தை ஓரளவுக்கு புரிந்து கொண்டு பேச விழைகின்றேன்.


பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற தலைப்பில் வெளியிடப்படுகின்ற இந்த நூல் ஏனைய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைப் போன்று அமையாது மிகப் பரந்துபட்ட ஒரு பன்முகப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கின்றது. இப் பிரபஞ்சம் உருவாகிய காலத்திலிருந்து இன்று வரை உலகளாவிய ரீதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள், கலாசார தன்னிருப்புப் போராட்டங்கள், பூகோள அரசியல் மாற்றங்கள், உலகப் பொருளாதாரத்தின் மாறுபடுநிலை, காலனித்துவ ஆதிக்கம் அதன் மூலமான உலகமயமாக்கல் மற்றும் தற்கால அரசியல் எனப் பல விடயங்களையும் ஆராய்ந்து வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.இவ்வாறான நூல்கள் மென்மேலும் வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். காரணம் உலகமானது சென்ற நூற்றாண்டு காலத்தினுள் சிறுத்துவிட்டது. சுருங்கி விட்டது. 200 வருடங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை யாழ் கல்லூரியை நடத்திய அமெரிக்க மிஷனரிமார் அமெரிக்காவில் பொஸ்டனில் இருந்த தமது தலைமையகத்திற்குப் போய் அவர்களின் சிரேஷ;டர்களின் அறிவுரைகளைப் பெற்று வருவதென்றால் ஆறு மாதங்கள் போகவும் ஆறு மாதங்கள் திரும்பவும் காலம் வேண்டியிருந்தது.இன்று நினைத்த உடனே நேருக்கு நேர் பேசக்கூடியதாக உள்ளது. உலகம் சிறுத்துவிட்டது; சுருங்கி விட்டது.

காலத்திற்குக் காலம் இலங்கையில் வரலாற்று நூல்கள் மாற்றி மாற்றி எழுதப்படுகின்றன. இதிகாச வரலாறுகளும் பழங்குடியினரின் இருப்புக்கள் மற்றும் மத வழிபாடுகள் பற்றிய பல தவறான விடயங்களை இப்பேர்ப்பட்ட வரலாற்று நூல்கள் தாங்கி வருவதை அவதானிக்கலாம். இலங்கையின் பூர்வீகக் குடிகளைத்தமக்குப் பின்னரான வந்தேறுகுடிகளாக காட்சிப்படுத்துகின்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுவரும் இக் காலகட்டத்தில் இன்றைய இவ்வாறான நூல்கள் பரந்துபட்ட ஆய்வுகளுடன் உசாத்துணை நூல்களின் ஆதாரங்களுடனும் பூர்வீக கல்வெட்டு அடையாளங்களுடனும் வெளிவருவது காலம் கடந்தும் எமது இருப்பை உறுதி செய்கின்ற ஒரு வரலாற்று ஆவணமாகக் கொள்ளப்படலாம்.


காலனித்துவஆதிக்கத்தின் கீழ் நாகரிக மேலாண்மை கொண்ட பலாத்கார வழிமுறைகளின் வாயிலாக அரங்கேற்றப்பட்ட உலகமயமாக்கல் நிகழ்வுகளும்,சுதேச மக்களை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டு தங்கள் குடியேற்றங்களை நிறுவி அதனுடன் இணைந்து ஐரோப்பிய மொழி, மதம், கலாசாரங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றையுஞ் சேர்த்துத் திணித்த வரலாறுகள் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

மனிதனை பூமியில் முதன் முதலில் தோற்றுவித்த ஆபிரிக்கா கண்டமே உலகெங்கும் மனிதப் பரம்பலை ஏற்றுமதி செய்தது என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கண்டமே முதலில் மனிதனைத் தோற்றுவித்தது என்று கூறுவாரும் உளர்.அந்தக் கருத்து வேற்றுமைக்குள் நாம் இங்கு போகவேண்டியதில்லை.

ஆத்ம ஞானிகளின் கண்டம் என்று அழைக்கப்படும் பெரும் மதங்கள் தோன்றிய ஆசியா பின்பு உலகெங்கும் மதப்பரம்பலை ஏற்றுமதி செய்தது. அதே போன்று இந்தியாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்தம் கி.மு 3 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து கிழக்கு, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியதாகக்கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பௌத்த மதம் பரவிய காலத்தில் இலங்கையின் வடபகுதியிலும் பௌத்த மத தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் சில அடையாளங்களையும் கல்வெட்டுக்களையும் இன்று அடையாளம் கண்டு அதற்கு தவறான ஒரு வியாக்கியானத்தின் மூலம் சிங்கள மக்கள் இப் பகுதிகளில் முன்பு வாழ்ந்துள்ளார்கள் என கூறப்படுகின்றது. இது முற்றிலுந் தவறானது. இவ்வாறான தவறான கருத்துக்களைப் பரப்ப விடுவது இன அழிப்புக்கு ஒப்பானது.


அடுத்து இந்தியாவில் தோன்றிய இந்து மதம் இந்திய உபகண்டத்திற்குள்ளேயே அடங்கிவிட்டது. விதி விலக்காக சோழப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகளை நோக்கி கலாசார செல்வாக்கு வடிவில் பரவிய போதும் சோழப் பேரரசின் வீழ்ச்சியுடன் அப்போதைய இந்துமதச் செல்வாக்கு குறைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

கிறிஸ்தவம் 16 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து முழு உலகிற்கும் பரவியது மட்டுமன்றி தற்போது 126 நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக வாழுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று கி.பி 6 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவில் தோன்றிய இஸ்லாம் மதம் இன்று 46 நாடுகளில் பெரும்பான்மையினர் மதமாக உள்ளது. சனத்தொகை ரீதியில் 2 ஆவது பெரிய சனத்தொகையாக இந்தியாவில் முஸ்லிம்கள் காணப்படுவதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகோளவாதம் என்பது வெறுமனே புவிப்பரப்புப் பற்றிய விடயம் மட்டுமல்ல. மாறாகப் புவியின் இருப்போடு தொடர்புபட்ட சூரியகுடும்ப அங்கங்களுடனான தொடர்பும் மற்றும் நட்சத்திரங்கள் பிரபஞ்சம் பற்றிய சிந்தனை அறிவுகளுடன் கூடியதே பூகோளவாதம் என்பதை படைப்பாளர் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியிருப்பது இவரின் தனிச் சிறப்பாகும்.ர்ழடளைவiஉ யிpசழயஉh என்பார்கள். முற்றிலும் அவ்வாறான முழுமையான சிந்தனையுடன் அணுவையும் அகிலத்தையுஞ் சேர்த்துப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டத்தை இந் நூலில் காண்கின்றோம்.


அவர் கூறாத ஒரு விடயத்தை இங்கு கூறலாம் என்று எண்ணுகின்றேன். சுமார் 45 வருடங்களுக்கு முன் என்று எண்ணுகின்றேன். இந்தியாவில் இருந்து ஒரு பிரசித்தி பெற்ற சோதிடர் இலங்கை வந்தார். அப்பொழுது பிரபல்யமாய் இருந்த நாஸ்திகவாதி ஏப்ரகாம் கோவூர் அவர்கள் சோதிடரிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு தூரத்தில் இருக்கும் சூரியனும் சந்திரனும் பிற கிரகங்களும் மக்களின் வாழ்க்கையை மாற்றுகின்றது என்று சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டார். கிருஷ;ணமூர்த்தி என்ற அந்த சோதிடர் பதற்றப்படாமல் ‘கோள்கள் மனிதன் வாழ்வை நிர்ணயிப்பதில்லை. கர்ம வினைப்படி ஏற்கனவே விதிக்கப்பட்ட வாழ்க்கையின் அம்சங்களை கோள்களின் இருப்பிடங்களை வைத்துக் கணித்துச் சொல்கின்றோம். என் முன் இந்தக் குடை இருக்கின்றது. தூரத்து வெளிச்சத்தில் அது தெரியாது. இங்கிருக்கும் விளக்குகள் அனைத்தையும் போட்டுவிட்டால் இங்கிருக்கும் குடை எல்லோர்க்கும் புலப்படும் என்றார். முழுமையான அறிவு பற்றிப் பேசும் போது நாம் இந்தக் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.

மேலும் இன்றைய நூலில் புவிப்பரப்பில் காணப்படுகின்ற இயற்கை சார்ந்த அம்சங்களையும் மூலவளங்கள், தாவரங்கள், விலங்குயிரினங்களையும் பேணிப்பாதுகாப்பது இன்னோர் அம்சமாக எடுத்துக்காட்டப்பட்டதுடன் இயற்கைக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு சமநிலையை பேணுவதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

தாய்மொழி கற்கை பற்றி குறிப்பிடும் போது தாய்மொழியில் கற்றுக்கொண்ட ஒருவர் தன் தாய்மொழி மூலம் கல்வியில் பெற்ற வளர்ச்சியினூடாக தன் சிந்தனையை ஸ்தாபித்த பின்னணியில் பிறமொழித் துணையோடு மேலும் தன்னையும் தன் அறிவையும் வளப்படுத்த இயலும் என்ற இவரின் வாதம் வரவேற்கத்தக்க ஒரு கருத்தாகும். இதே கருத்தையே நான் இன்றைய தினம் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ந-டநளளழளெ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் வலியுறுத்தியிருந்தேன். அதாவது தாய் மொழி கற்கையானது தனது பாட விடயப்பரப்புக்களை சொந்த மொழியில் சிறப்பாகப் புரிந்து கொண்டு கல்வி கற்கின்ற போது பல வித பலன்கள் கிட்டுகின்ற போதும் சர்வதேச மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிக் கற்கை நெறியையும் சம காலத்தில் மேலோங்கச் செய்வதன் மூலமே உயர் நிலைகளை எட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்ற ஒரு குறிப்பை அங்கு முன்வைத்திருந்தேன். அதே குறிப்பையே இங்கும் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது எமது கருத்தொற்றுமையை வலியுறுத்துவதாக அமைகின்றது.

இவ்வாறு பூமி பிரபஞ்சம் பூகோளவாதம் என்ற தலைப்புக்களின் கீழ் ஆராய்ந்த ஆசிரியர் இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றியும் மிகத் தெளிவாக ஆராய்ந்து குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். சமஷ்டி என்ற வடமொழிச் சொற் பிரயோகத்தால் விளைந்த வரலாற்று நகர்வுகளும் அதனையொட்டி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

தம்மதீபக் கோட்பாட்டின் படி இலங்கைத்தீவு பௌத்த தர்மத்திற்கென புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது ஆசி வழங்கப்பட்ட பூமி என்ற கருத்துருவம் மேலோங்க பௌத்த மதம் – சிங்கள மொழி – அரசு என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து சிங்கள மேலாதிக்கத்தை உருவாக்கியமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிய சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களை விட உயர்ந்தவர்கள் எனவும் கரையோரச் சிங்களவர்கள் இரண்டாம் பட்சமானவர்கள் என்ற நிலைப்பாட்டில் கண்டியர்கள் இருந்த காலத்திலேயே ளு.று.சு.னு பண்டாரநாயக்காவினால் சமஷ;டிக் கோரிக்கை முதன் முதலில் 1926ல் மொழியப்பட்டது. சிங்களத் தலைவர்களிடமிருந்து இவ்வாறு முன்மொழியப்பட்ட போது அவை பற்றி அக் காலத் தமிழ்த் தலைவர்கள் கண்டு கொள்ளாதது வருத்தத்திற்குரியது. அக் காலத்திலேயே தமிழ் மக்களின் இருப்புக்கான நிரந்தரத்தீர்வு ஒன்று கிட்டுவதற்கு வாய்ப்பான காலம் கனிந்த போதும் அதனைக் கருத்திற் கொள்ளாது பிரித்தானிய சாம்ராஜ்யத்திலும் மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் கல்வி சார் தொழில் வாய்ப்புக்களைத் தமிழ் மக்கள் பெறுவதற்கான சிந்தனைகளுக்கே தமிழ்த் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.


அதே போன்று தமிழ் மக்களின் எழுச்சி பெற்ற கல்வி கற்ற நடுத்தர வர்க்கம் இந்த மண்ணிலிருந்து வெளியேற வளமான மூளைகளைத் தமிழ் மண் இழக்க நேர்ந்தது. இதனால் தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேடும் வழியை நோக்கி திசை திரும்பியதன் விளைவே இன்று எமது தேசியச் சிந்தனைகளில் காணப்படக்கூடிய பின்னடைவுகளாக இருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு என்ற ஒரு தீர்மானத்தை 1944 ஆம் ஆண்டில் முதன் முறையாக டாக்டர் ளு.யு.விக்கிரமசிங்க நிறைவேற்றிய போதும்இந்தியாவுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை தேசிய காங்கிரஸ் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டதன் வாயிலாக அது கைகூடாமல் போனது. ஸ்ரீ வல்லபாய் பட்டேல் அவர்கள் இந்தியாவுடன் ஒன்று சேர்க்கப்படவேண்டிய நாடாக இலங்கையை அப்போது அடையாளங்காட்டி இருந்தார். இந்தியாவுக்கு சாதகமாகப் பேசிவந்த சிங்களத் தலைவர்கள் சுதந்திரம் கிடைத்ததும் மலையக மக்கள் பத்து இலட்சம் பேரின் குடியுரிமைகளைப் பறித்தனர். இந்தியாவைப் புறக்கணித்து பிரித்தானியாவுடன் கூடிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாகவே இந்தியாவிற்கு எதிரான இராணுவத் தளங்களை பிரித்தானியர் இலங்கையில் அமைக்க முடிந்ததுடன் தமிழருக்கெதிரான அரசியலமைப்புச் சட்டத்தினை சிங்களத் தலைவர்கள் பெற்றுக் கொள்வதற்கும் வழி வகுத்தது. அப்போது கூடத் தமிழ் தலைவர்கள் புவி சார் கண்ணோட்டத்தை அல்லது சிங்கள தலைவர்களுக்கும் மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் இடையேயான அரசியல் உள்நோக்கங்களைச் சந்தேகக்கண் கொண்டு நோக்காமை அவர்களின் கற்பனை நிறைந்த அரசியல் சிந்தனைகளையும் சிங்களத் தலைவர்களின் மதிநுட்பம் மிக்க அரசியல் நகர்வுகளையும் எடுத்துக் காட்டுவதற்கான சிறந்த உதாரணங்களாக இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சிறந்த அறிவாளியாகிய பேராசிரியர் சி.சுந்தரலிங்கத்திடம் ‘நீயே சிறந்த மதியூகி’ என்றதும் அவர் தமிழர் தவிர்ந்த சிங்களவர் மட்டும் அமைச்சரவையை நியமிக்கும் வழிமுறைகளை டி.எஸ்சேனாநாயக்காவிற்கு எடுத்துக் கூறியிருந்தமை இத் தருணத்தில் நினைவிற்கு வருகின்றது.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் விலகி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 1949ம் ஆண்டில் சமஸ்டிக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கிய போதும் கண்டிச் சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களும் கைகோர்த்து தமிழ் மக்களை ஒடுக்கத்தொடங்கிய பின்புதான் தமிழ்த் தலைவர்களுக்கு சமஸ்டி முறை பற்றிய உண்மையான ஞானோதயம் தோன்றத் தொடங்கியது என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஆசிரியர். ளு.று.சு.னு பண்டாரநாயக்க என்ற கரையோரச் சிங்களவர் சிறீமாவோ பண்டாரநாயக்க என்ற கண்டியப் பெண்ணை மணம் முடித்த போதே கண்டிய – கரையோர சிங்கள உடன்பாடு தொடங்கிவிட்டது எனலாம். அவ்வாறான மேல்மட்டப் பிணைப்பு கண்டிய சிங்களவரை சமஷ்டிக் கோரிக்கையில் இருந்து கீழிறக்க வைத்தது. இருசாராரும் சேர்ந்து எம்மை ஒதுக்கத் தலைப்பட்டார்கள்.

வெள்ளைக்காரர்கள் பிரித்து ஆள தமிழர்கள் பயன்பட்டார்கள் என்றும் தமிழர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன என்றும் கூறி எம்மீது அநீதிகள் கட்டவிழ்க்கப்பட்டன. இவ்வாறு காலத்துக்கு காலம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் 1956ல் சிங்கள மொழி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டமை, அதனைத் தொடர்ந்து தனி ஈழம் பற்றிய சிந்தனை உருவாகிய விதம்,உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள், இனவாரித் தரப்படுத்தல் என்ற பல விடயங்களையும் ஆராயத் தவறாத ஆசிரியர் 1983 கறுப்பு ஜுலை, இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வநாயகத்தின் கூற்று,முள்ளி வாய்க்கால் தந்த பெரு வலிதமிழ் இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் மன வலிஆகிய அனைத்தையும் தொட்டுச் சென்று இறுதியாக இராஜபக்சக்களின் வழியில் அமைதியாகச் செல்லும் சிறிசேன என்ற தலைப்புடன் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கின்றார் ஆசிரியர். இந் நூல்பற்றி விலாவாரியாக ஆராய்வதற்கோ அல்லது குறிப்புகளை மேற்கொள்வதற்கோ கால அவகாசம் அற்ற நிலையில் எனது குறிப்புக்களை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன். ஆசிரியர் திரு.திருநாவுக்கரசரின் முழுமையான உலக நோக்கும் தமிழ் மக்கள் மீது அவருக்கிருக்கும் கரிசனையும் அவர் நூலில் நாம் வாசித்தவற்றில் இருந்து தெற்றெனப் புலப்படுகின்றன. இவ்வாறான நூல்கள் இன்றைய காலத்தின் கட்டாயம் என்று கூறி ஆசிரியரைப் பாராட்டி எனது உரையை இத்துடன் நிறைவு செய்து கொள்கின்றேன்;.
நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More