Home இலங்கை அர்ஜூன் அலோசியசுடன் தொடர்பு பேணியோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் :

அர்ஜூன் அலோசியசுடன் தொடர்பு பேணியோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பேச்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியசுடன் தொடர்பு பேணியவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அலோசியசுடன் தொடர்பு பேணிய அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவர் பற்றிய விபரங்களும் அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அலோசியசிற்கு சொந்தமான மெண்டிஸ் டிஸ்டிலிரிஸ் நிறுவனத்திடமிருந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும், கிறிஸ்தவ பௌத்த மதத் தலைவர்களும் பணம் பெற்றுக்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பான 157 காசோலை பற்றுச் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More