Home இலங்கைமுல்லைத்தீவில் 275 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

முல்லைத்தீவில் 275 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பதினொரு பாடசாலைகளை சேர்ந்த 275 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ்நலம் காப்போம் அமைப்பினரால் உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் வைத்து இவ் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதிகளை கொண்ட கற்றல் உபகரண தொகுதிகளே மாணவர்களுக்க வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புதுகுடியிருக்கு கோட்டக் ககல்வி அதிகாரி சுப்பிரமணியேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் மற்றும் வலயக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More