Home இந்தியா இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.

இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.

by admin

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இடம்பெற்ற நிதாஹஸ் சுதந்திரகிண்ண இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

இந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து, 140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.ஆட்டநாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது. நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கையும் பங்களாதேசும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Colombo: India’s Shikhar Dhawan plays a shot during their Twenty20 cricket match against Sri Lanka in Nidahas Triangular series in Colombo, Sri Lanka, Tuesday, March 6, 2018. AP/PTI(AP3_6_2018_000167A)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More