Home இலங்கைவன்முறைகள் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர்

வன்முறைகள் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வன்முறைகள் பொருளாதாரத்திற்கு பாதிப்பை எற்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கிரியுல்ல, குருவிட்ட மற்றும் வெலிகம போன்ற இடங்களில் சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் நட்டஈடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவம் சுற்றுலாத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More