Home இலங்கைஇலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை

இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை

by admin


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர கிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியின் நேற்றைய பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய காரணத்தால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும், 14ம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேசுக்கெதிரான போட்டியிலும் சந்திமால்; விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனைய இலங்கை வீரர்களுக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More