Home இந்தியா சுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது

சுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது

by admin

சுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டி மழை காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியஅணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆட்ட நாயகன் விருது சர்துல் தாகுருக்கு வழங்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More