Home இலங்கை இறுதி நேரத்தில் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்த இலங்கை குடும்பம்

இறுதி நேரத்தில் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்த இலங்கை குடும்பம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று இறுதி நேரத்தில் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளது. விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில் இவர்களின் நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. நடேசலிங்கம், பிரியா தம்பதியினரும் அவர்களது பிள்ளைகளும் மெல்பர்ன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றைய தினம் இவர்கள் மெல்பர்ன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் விமானத்தில் இருத்தப்பட்டுள்ளனர். எனினும் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளினால் நாடு கடத்தப்படுவதிலிருந்து இந்த குடும்பம் தப்பித்துக்கொண்டுள்ளது.

கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடேசலிங்கமும் பிரியாவும் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். இலங்கைக்கு திரும்பினால் நடேசலிங்கம் துன்புறுத்தப்படக் கூடும் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 15, 2018 - 9:00 am

Just at last Ausi government preserve as well comply towards the International legal framework.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More