Home இந்தியா குரங்கணி வனப்பகுதி காட்டுத்தீயில் உயிர் இழந்தோ ர் 12 ஆக உயர்வு

குரங்கணி வனப்பகுதி காட்டுத்தீயில் உயிர் இழந்தோ ர் 12 ஆக உயர்வு

by admin


தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்துவிட்டதால், இறப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட சமயத்தில் 99சதவீத தீக்காயங்களுடன் இருந்த திவ்யா என்பவருக்கு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனளிக்காபமல் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீவிர சிகிச்சை வழங்கப்பட்டாலும் தீக்காயமடைந்த நிலையில் மீட்கப்படும் போதே அவர் பலத்த காயத்துடன் இருந்ததாகவும் மருத்துவ ரீதியாக 99 சதவீத தீக்காயம் மிகவும் ஆபத்தான மூன்றாம் நிலை தீக்காயம் என்பதால் இவர் மரணம் அடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில், குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More