Home இந்தியா இலங்கைத்தமிழ் அகதிகளையும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளையும் ஒன்றாக கருத முடியாது :

இலங்கைத்தமிழ் அகதிகளையும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளையும் ஒன்றாக கருத முடியாது :

by admin


இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்கும் குடிபெயர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய அரசு நேற்றைதினம் தாக்கல் செய்த பதில் மனுவில் இலங்கை தமிழர்களையும் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது எனவும் அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போன்றதாகும் எனவும் தெரிவித்துள்ளது

இந்தியா – இலங்கை நாடுகளிடையே 1964 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிப்பட்டுள்ளது

மேலும், வெளிநாட்டவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைய கடவுச்சீட்டு தேவை எனவும் மத்திய அரசு தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More