Home இலங்கை “காணாமல் ஆக்கப்பட்ட எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத்சந்திர என்ற காவற்துறை அதிகாரி”  

“காணாமல் ஆக்கப்பட்ட எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத்சந்திர என்ற காவற்துறை அதிகாரி”  

by admin

எனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என  2008 ஆம் ஆண்டில்  காணாமல்போன  மொரட்டுவ பல்­க­லைக்­க­ழக மாண­வனின்   தந்தை  ஜெனி­வாவில் தெரி­வித்துள்ளார்.

மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் நீதி கேட்பதற்காக   அவரது தந்­தையார் தர்­ம­கு­ல­சிங்கம்  ஜெனிவா சென்றுள்ளார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர் “எனது மகன் கடந்த  2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறு­வ­னத்­திற்கு பயிற்ச்­சி­களை பெற்­றுக்­கொள்ள சென்றிருந்தார்.  அதன் பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை. இப்­போது பத்து ஆண்­டுகள் ஆகின்­றன, இந்த காலத்தில் கொழும்பில் வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி காவல் நிலை­யங்­க­ளிலும் காவல் துறை தலைமை அலு­வ­ல­கத்­திலும், குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு உள்­ளிட்ட அனைத்து காவல் நிலை­யங்­க­ளிலும் முறைப்­பா­டுகள் செய்­துள்ளோம். அதேபோல் அமைச்­சர்கள் பல­ரிடம் தமிழ் அமைச்­சர்கள் பல­ரி­டமும் இறுதி­யாக பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி என அனை­வ­ரி­டமும் முறைப்­பாடு செய்துள்ளோம். காணாமல் போனோர் குறித்து கண்­ட­றிய அமைக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­விலும் நான் சாட்­சியம் வழங்­கி­யுள்ளேன். முழு­மை­யான விப­ரங்­களை இதில் கொடுத்­துள்ளேன்.

எனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­களை நான் சேக­ரித்­து­ கொண்­டுள்ளேன். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு இயங்­காத பொம்­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. அதன் செயற்­பாட்டால் எமக்கு எந்த நன்­மையும்  இல்லை. காவற்துறையும்  தக­வல்­களை பதிவு செய்­து­கொண்­டுள்­ளதே தவிர உண்­மை­களை கூறவோ கண்­ட­றி­யவோ முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இது­வரை எந்த முன்­னேற்­றங்­களும் இல்லை.

பூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்ற தகவல் கிடைத்து எனது மனைவி அங்கு சென்­றி­ருந்தார். எனது மகன் குறித்து முழு­மை­யான தக­வல்­களை கொடுத்து அவரை அடை­யா­ள­ப்ப­டுத்­திய பின்னர் பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­ப­டு­வது வழக்கம். அதே நடை­மு­றையில் எனது மகன் இருக்­கின்றார் என கூறி அனு­மதி வழங்கப்பட்டது. அதன் பின்னர்  எனது மனைவி அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் யாரு­டைய தலை­யீடு என தெரி­ய­வில்லை எங்­களை தடுத்­து­விட்­டனர். பின்னர் அவர் பிரத்­தி­யே­க­மாக ஒரு சிறையில் இருப்பதாகவும் அங்கு எவ­ருக்­குமே பார்­வை­யிட அனு­மதி இல்லை எனவும் நாம் அறிந்­துகொண்டோம். மீண்டும் நாம் சில முயற்­சி­களை மேற்­கொண்டோம். அங்கு உள்ள சில காவல்துறை உறுப்­பி­னர்­க­ளுக்கு எனது மகன் குறித்து தக­வல்கள் தெரியும் என உறு­தி­யாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது ஒரு காவற்துறை  அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் சரத் சந்திர என தெரிவித்துள்ளனர். எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More