Home இந்தியா இந்தியா முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என 11,370 பேர் தற் கொலை…

இந்தியா முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என 11,370 பேர் தற் கொலை…

by admin

2016-ம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்களின்படி இந்தியா முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என மொத்தம் 11,370 பேர் தற் கொலை செய்துள்ளனர். இவர்களில் 5019 பேர் விவசாய தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் தமிழகத்தில் மட்டும் 381 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விவசாயிகள் வறட்சி காலங்களில் பெரும் நஸ்டத்துக்குள்ளாவதால் அவர்களால் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத நெருக்கடியில் அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் எனவும் அதற்கு அடுத்த படியாக கர்நாடகத்திலும், மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும், தெலுங்கானா 4-வது இடத்திலும், தமிழகம் 5-வது இடத்திலும் உள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More