Home இந்தியா பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகள் அணைக்கப்படுகிறது..

பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகள் அணைக்கப்படுகிறது..

by admin

பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு இந்திய மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்ச் 24 ம் திகதியான இன்று  பூமி நேரம் கொண்டாடும் விதமாக, இயற்கை இழப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, தான் தனது அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய விளக்குகளையும் 8:30 இருந்து 9:30 மணிவரையில் ஒருமணிநேரம் அணைத்துவிடப் போவதாகவும் அவ்வாறு எல்லாரையும் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுகர்வு கலாச்சாரத்திலிருந்து மாறுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நமது செயல்பாடுகளில் இருந்து நிலையானவற்றிற்கு மாறுவதற்குமான இத்தருணத்தை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளர். பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாகவும் செலவுகளைக் குறைக்கவும் கூட இந்த நடவடிக்கை அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் இயற்கையின் நீடித்த பயன்களைப் பெறுவதற்கான சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான ஒரு சிறந்த தேர்வாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

2018ல் நடைபெறும் புவி நேரத்தில், சுற்றுச்சூழலில் சில பழக்கங்கள், நடைமுறைகள், சுமையாக மாறியுள்ள வாழ்க்கை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான தேர்வை ஊக்குவிக்கும் முயற்சியை டபிள்யூ டபிள்யூ எப் இண் அமைப்பு ”கிவ் அப் கிவ் பேக்” இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.

இப்பிரச்சாரம் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் கைவிடுதல், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கைவிடுதல், அலுவலகங்களில் ஒருவருக்காக ஒரு கார் என்று வழங்கப்படுவதைக் கைவிடுதல், பொது இடங்களில் மின் கழிவுகளை போடுவதைக் கைவிடுதல் உள்ளிட்டவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More