Home இலங்கை நாட்டின் ஆட்சியாளர்கள் அகந்தையை விட்டொழிக்க வேண்டும் :

நாட்டின் ஆட்சியாளர்கள் அகந்தையை விட்டொழிக்க வேண்டும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டின் ஆட்சியாளர்கள் அகந்தையை விட்டொழிக்க வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2000மாம் ஆண்டு அனைவருக்கும் வீடு என்ற கனவையே தனது தந்தை கொண்டிருந்தார் எனவும், கொடிய பயங்கரவாதத்தினால் தனது தந்தையின் உயிர் காவு கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டில் மிகவும் மோசமான ஓர் தேசமே தம்மிடம் ஒப்படைக்கபபட்டது எனவும், அகந்தையை முன்னிலைப்படுத்தி நாட்டை இரண்டாம் கட்டமாக கருதியே அப்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்தினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஆட்சியாளர்கள் தாம் என்ற அகந்தையை ஒழித்து விட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More