Home இலங்கை25 வருடங்களின் பின், சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் மட்டக்களப்பு விமான நிலையம் ….

25 வருடங்களின் பின், சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் மட்டக்களப்பு விமான நிலையம் ….

by admin

மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் மீண்டும்  சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளது. இதனையடுத்து  விமான சேவைகள் மற்றும் சேவை நட­வ­டிக்­கை­களை இன்று 25 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஆரம்­பிக்க விமான நிலை­யங்கள் மற்றும் விமான சேவைகள் நிறு­வனம் நட­வ­டிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் 1958 நவம்பர் 17 ஆம் திகதி சிவில் விமான சேவைகள் திணைக்­க­ளத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. யுத்தம் கார­ண­மாக கடந்த 25 வருட கால­மாக இந்த விமான நிலையம் இரா­ணுவ மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

நாட்டில் தற்­போது சுமுக நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் உள்­நாட்டு வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வசதியை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்­புக்கு விமான சேவைகளை நடத்த தனியார் விமான சேவைகள் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More