Home இலங்கை அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருனை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்…

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருனை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்…

by admin

 மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு  கடிதம்-

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கையை விடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று(26) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹா தர்ம குமாரக் குருக்கள் மற்றும் செயலாளர் பிரம்மசிறி மனோ ஐங்கரசர்மா குருக்கள் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில், அண்மையில் கிளிநொச்சியில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார்.அவரது கணவராக அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவரின் இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் குறித்த இரு குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நாட்டின் ஜனாதிபதியான உங்களின் அதிகார தத்துவத்தின் பிரகாரம் ஆனந்த சுதாகரனுக்கு கருனை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More