Home இலங்கை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…

by admin

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இன்று(02) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிவரை இடம்பெற்றது.

அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 28-08-2018 இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் இன்று இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, மின்சாரம், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டது.

முன்னதாக மறைந்த பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் மற்றும்  அரசாங்க அதிபராக இருந்த ஜயாத்துரை ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாது அவை தொடர்ந்தும் தீர்மானங்களாக இருப்பது தொர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட அதேவேளை இன்றும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More