Home இலங்கை கோட்டாபய சீனாவில் – My3 க்கும் – Mrருக்கும் இடையில் சமரச முயற்சியா?

கோட்டாபய சீனாவில் – My3 க்கும் – Mrருக்கும் இடையில் சமரச முயற்சியா?

by admin

 
சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக சீனா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும், கோத்தபாய ராஜபக்சவையும் தனித்தனியாக தனது நாட்டிற்கு அழைத்துள்ளதாகவும்,. இவர்கள் இருதரப்பையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலி ரத்தின தேரர், அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க உட்பட ஐவர் கொண்ட குழுவை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீனா செல்லவில்லை.

 ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களான ஸ்ரீலால் லக்திலக்க, ஹர்ஸ குமார நவரட்ன, டொக்டர் லலித் பீ. சமரக்கோன் ஆகியோர் கடந்த மார்ச் 28ம் திகதி சீனாவிற்கு சென்று கோதபாயவை சந்தித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இருதரப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் வெளியாகாதபோதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொது எதிரணிக்கும் இடையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன இதேவேளை சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More