Home இலங்கை திகன வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

திகன வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அண்மையில் கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு சென்று பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறி;ப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்கள், காணொலிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன் மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 081 2 228 009 அல்லது 070 3 654 901 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More