Home இலங்கை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், ஜனாதிபதி சொன்னாலும் அரசில் தொடர்ந்தும் இருக்கமாட்டேன் :

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், ஜனாதிபதி சொன்னாலும் அரசில் தொடர்ந்தும் இருக்கமாட்டேன் :

by admin


பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

குருநாகல வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற் விளையாட்டுபோடி நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டு எதிர்கட்சியினருக்கே நம்பிக்கையில்லா பிரேரணை தேவைப்பட்டது. அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான் ஆதரவு கொடுத்திருந்தால் எனக்கு அமைச்சரவையில் இருப்பதற்கான எந்தவித தகுதியும் இல்லை. நான் பிரேரணைக்கு ஆதரவாக இருந்து நான் ஆதரவாக வாக்களித்திருந்தால், நான் கண்டிப்பாக அமைச்சரவையில் இருந்து விலகியிருந்திருப்பேன்.
ஜனாதிபதியோ பிரதமரோ தெரிவிக்கும் வரை நான் அமைச்சரவையில் இருந்திருக்கமாட்டேன்; எனவும் இது தான் எனது கொள்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பதவியைப் பார்த்து செயற்படுவது எனது கொள்கையில்லை நான் பதவிக்காக கொள்கையை கைவிடுபவன் அல்ல. ஆனால் இதுபற்றி ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுப்பார்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.

உண்மையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை சுகந்திர கட்சியில் பலர் மாட்டிக்கொண்டனர். சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக வாக்களித்து ஜனாதிபதியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டனர்.
ஆனால் தற்போது இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலமாக எமது அரசாங்கம் பலமடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More