Home இலங்கை மன்னார் நகரசபை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வசம் :

மன்னார் நகரசபை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வசம் :

by admin

மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இரகசிய வாக்களிப்பின் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையின் ‘சபா’ மண்டபத்தில் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர்.இதன் போது 16 உறுப்பினர்களுக்கும் இரகசிய அடிப்படையில் வாக்களிப்பு இடம் பெற்றது.

இதன் போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் நடு நிலமை வகித்தார்.ஏனைய 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) 8 வாக்குகளையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) 7 வாக்குகளை பெற்றனர்.

.இந்த நிலையில் அதிகூடிய வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மன்னார் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். -மேலும் உப தலைவர் தெரிவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகிய இருவரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது.16 உறுப்பினர்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ், பர்னாந்து ஜோசப் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய மூவரும் வாக்களிக்காது நடு நிலமை வகித்தனர்.ஏனைய 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் 8 வாக்குகளையும்,ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் 5 வாக்குகளையும் பெற்ற நிலையில் கூடிய வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் மன்னார் நகர சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

 

குறித்த அமர்வின் பொது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்,மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More