Home இலங்கைமன்னாரில் வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நேர்முகத்தேர்வுகள் ஆரம்பம்

மன்னாரில் வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நேர்முகத்தேர்வுகள் ஆரம்பம்

by admin


மன்னார் மாவட்டத்தில்; உள்ள வேலை இல்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் நேற்று (17) செவ்வாய்க்கிழமை முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மூன்று பிரிவுகளில் நேர்முகத்தேர்வுகள் இடம் பெற்று வருகின்றது.

-மன்னார் மாவட்டத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் காணப்படுகின்ற போதும்,அவர்களில் சுமார் 515 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். -இவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(17) தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மூன்று கட்டங்களாக நேர்முகத்தேர்வுகள் இடம் பெற்று வருகின்றது.

-பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும்,விடுபட்ட குறித்த பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25 ஆம் திகதி புதன் கிழமை மாலை வரை நேர்முகத்தேர்வுகள் இடம் பெறும் என மன்னார் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More