Home இந்தியா ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்

by admin


ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து தெலுங்கானா மாநிலம் உதயமான போது ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் மத்திய அரசு ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரமுடியாது எனவும் அதற்கு பதிலாக சிறப்பு நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர மக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினயதுடன் 2 மத்திய அமைச்சர்களும் பதவிவிலகியிருந்தனர்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று 12 மணி நேர உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டேடியத்தில் குவியும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More