Home இலங்கை போலி தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்த தமிழ் பெண் கைது

போலி தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்த தமிழ் பெண் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மருத்துவ சான்றிதழ் இன்றி மருத்துவராக தன்னை வெளிக்காட்டிக்கொண்டு தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்த தமிழ் பெண் ஒருவரை பாதுக்க காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பாதுக்க அருக்வத்தை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் டி.கஹங்கம, காவல்துறையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பை மேற்கொண்டு இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்த தேடுதலில் பல மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட பெண் மனநோயாளியாக இருக்கலாம் எனவும் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மனநல சிகிச்சையை பெற்றுள்ளமைக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

திறமையான மருத்துவர் ஒருவர் குறித்த இடத்தில் தனது சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்துள்ளார். அவர் அந்த இடத்தை கைவிட்டு வேறு பிரதேசத்தில் சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்துள்ளதனையடுத்து குறித்த பெண் இந்த இடத்தில் சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட பிரதேசவாசிகள் அது குறித்து பொது சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தநிலையில் அதற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More