Home இலங்கைகொக்­கு­வி­ல் வாள்­வெட்­டு எண்மர் கைது…

கொக்­கு­வி­ல் வாள்­வெட்­டு எண்மர் கைது…

by admin

யாழ்ப்பாணம்  கொக்­கு­வி­லில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் இரு­வரும், ஆவா குழுவின் ஒளிப்படத்தில்  இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவற்துறையினரால் அறுவருமாக எண்மர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என காவற்துறையினர்  தெரி­வித்­ததுள்ளனர்.

கொக்­கு­வில், மற்றும்  தெல்­லிப்­ப­ளையைச் சேர்ந்த 25 வய­து­டைய இரு­வரே இ்வ்வாறு கைது செய்­யப்­ப­டுள்­ள­னர். அவர்­க­ளில் ஒரு­வர் ஏற்­க­னவே காவற்துறையினரை வெட்­டிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றால் பிணை­வ­ழங்­கப்­பட்­டுள்­ள­வர் என விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது எனவும்,  இவர்கள்  இரு­வ­ரும் மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் எனவும்,  காவற்துறையினர்  தெரி­வித்­துள்ள­னர்.

 கொக்­கு­வி­லில் நேற்­று­முன்­தி­னம் ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர் எனக் கூறப்­ப­டும் ஒரு­வர் வீடு புகுந்து இளை­ஞர் ஒரு­வர் மீது வாளால் வெட்­டி­யதில்  காய­ம­டைந்த நபர் உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More