Home இலங்கை பாரிய குற்றங்களின் பின்னணியில் STF – யஸ்மின் சூக்கா – பொய் என்கிறது சிங்கள இணையம்..

பாரிய குற்றங்களின் பின்னணியில் STF – யஸ்மின் சூக்கா – பொய் என்கிறது சிங்கள இணையம்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

போர் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் கூறி விசேட அதிரடிப்படையின் 56 அதிகாரிகளுக்கு எதிராக அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய் சிலரே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும். இந்த முன்னாள் அதிரடிப்படையின் சிப்பாய்களுக்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டள்ளத.

இந்த அரசசார்பற்ற நிறுவனம் அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய்களிடம் சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது. போர் குற்றம் சுமத்தப்படும் அதிரடிப்படையின் அதிகாரிகளின் உயர் அதிகாரிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சிப்பாய்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகா, ஐ.நா அமைதிப்படை உயர் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரித்தானிய நாடாளுமன்றில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்திற்கான அமைப்பு கடந்த திங்கட்கிழமை (23.04.18)  அறிக்கை ஒன்றை  சமர்ப்பித்துள்ளது.

தடுப்பிலுள்ளவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தல், கொலைசெய்தல், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தல், வெள்ளைவான் கடத்தல் போன்றவற்றிற்கான கட்டளைகள் விசேட அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளிடமிருந்தே கிடைத்ததென, விசேட அதிரடிப்படையில் முன்னர் பணியாற்றிய படையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையில் முன்னர் பணியாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக இயங்கிய ஆயுதக் குழுக்களின் சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக, இந்த அமைப்பின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கட்டளை பிறப்பித்தவர்களின் பெயர்கள், ஒளிப்படங்கள் மற்றும் வதை முகாம்களின் வரைபடங்கள் போன்றவற்றை, தம்மிடம் சாட்சியங்களாக  சட்சியம் அளித்தவர்கள் வழங்கியுள்ளதாகவும், இந்நிலையில், இலங்கை படையினர் மீதான மனித உரிமைகள் ஆய்வுகள் நடத்தப்படாமல் அவர்களை ஐ.நா. அமைதிகாக்கும் செயற்பாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாது எனவும் யஸ்மின் சூகாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

36 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை, ரவிராஜ் கொலை, தடுப்பு முகாம்கள், சித்திரவதை கூடங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவற்றிற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் குறித்த முன்னாள் சிப்பாய்கள் பொய் சாட்சியமளித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசசார்பற்ற நிறுவனமே இவர்களுக்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More