Home சினிமா தனி ஒருவனுக்கு பின்னர் 15 படங்களில் நடிக்க மறுத்த அரவிந்தசாமி

தனி ஒருவனுக்கு பின்னர் 15 படங்களில் நடிக்க மறுத்த அரவிந்தசாமி

by admin


தனி ஒருவன் படத்தில் நடித்த பின்னர் அரவிந்த்சாமி 15 படங்களில் நடிக்க மறுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சாமியின் இரண்டாம் சுற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சித்திக் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மே மாதம் 11ம் திகதி வெளியாகவுள்ளது. கதாநாயகனாக நடித்து பார்க்கப்பட்டு வந்த அரவிந்த்சாமி  அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லனாக வந்து நடித்து கலக்கியிருந்தார்.

அரவிந்த்சாமியால் இப்படிக் கூட நடிக்க முடியுமா என ரசிகர்கள் நினைக்குமளவுக்கு வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரைத் தேடி சித்தார்த் அபிமன்யு போன்ற கதாபாத்திரங்களே வந்துள்ளன எனவும் இதனால் அவர் 15 படங்களில் நடிக்க அவர் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.

அரவிந்த் சாமி சதுரங்க வேட்டை 2, கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேபோன்று அரவிந்த்சாமி மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More