Home இலங்கை ஜனாதிபதியின் நிகழ்வில் அரபு நாட்டவர் போல் ஆடை அணிந்த நபர் விளக்கமறியலில்…

ஜனாதிபதியின் நிகழ்வில் அரபு நாட்டவர் போல் ஆடை அணிந்த நபர் விளக்கமறியலில்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட, பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில, அரபு நாட்டவர் போல் ஆடை அணிந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தையை சேர்ந்த இந்த நபரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்து, அவரை பிங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேக நபர் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாளைய (03) தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மனநோயால் பாதிக்கப்பட்ட என காட்ட முயற்சித்து வரும் இந்த நபர் 57 வயதானவர் என பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி கலந்துக்கொண்ட நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு செல்ல முயற்சித்த போதே இந்த நபர் கைதுசெய்யப்பட்டார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கத்தியுடன் பிரவேசிக்க இந்த நபர் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More