Home உலகம் ஆர்மானியாவில் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டம்

ஆர்மானியாவில் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆர்மானியாவில் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்மானியாவின் புரட்சித் தலைவர் நிகோபல் பசிங்கன் ( Nikol Pashinyan) தலைமையிலான தரப்பினர் நாடெங்கிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆர்மானியாவின் அரச தலைவர் செர்ஸ்க் சர்க்சியான் ( Serzh Sargsyan ) ஐ பதவி விலகுமாறு கோரியே இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களை முற்றுகையிட்டும் வீதிகளை மறைத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போரட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை தொடர முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More