Home இலங்கை கடமை நேரத்தில் மரணமான பிரதேச செயலாளருக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லை

கடமை நேரத்தில் மரணமான பிரதேச செயலாளருக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்ற போது கடமை நேரத்தில் மரணமடைந்த முன்னாள் கண்டாவளை பிரதேச செயலாளருக்கு ஒரு அஞ்சலி கூட செலுத்தப்படவில்லை என பொது அமைப்புகளும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கண்டாவளை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03.05.2018) பிற்பகல் 2.00 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலக மண்டபத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தலைமையில நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கடமை நேரத்தில் உயிரிழந்த கண்டாவளைப் பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தப்படாமை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் உத்தியோகத்தர்கள் மத்தியிலும் கவலைத் தோற்றுவித்ததுடன் மாவட்டத்தில் அர்ப்பணிப்பான பணியினால் மக்கள் மனதில் நிறைந்த முன்னாள் பிரதேச செயலாளருக்கு அஞ்சலி கூடச் செலுத்த முடியாத பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பலராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More