நீட் பரீட்சைக்காக மகனுடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற தமிழகம் திருவாரூரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ள நிகழ்வு இந்தியாவின் நீட் பரீட்சை வீமான விமர்சனத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
இந்தியா முழுவதும் நீட் பரீட்சை நடைபெற்றது. இதற்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பரீட்சை நிலையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார்.
இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், விடுதியில் இருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகாலிங்கம் பரீட்சை எழுதிய நிகழ்வு அனைவரையும் பெரும் நெகிழ்வுக்கு உள்ளாக்கியது.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/05/31947494_1689083437811666_4991702298120945664_n.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2018/05/31950382_1734747703230113_6417512121906495488_n-800x450.jpg)