Home உலகம் அவுஸ்ரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை….

அவுஸ்ரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை….

by admin
Katrina Miles and her children were named as victims of the shooting (Facebook)

அவுஸ்ரேலியாவில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவுஸ்ரேலியாவில்   மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆஸ்மிங்டன் நகரத்தில் உள்ள  ஒரு வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் காணப்பட்டமை குறித்து அப்பகுதி மக்கள் காவற்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற காவற்துறையினர்  பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு 7 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டனர்.  அதில் நான்கு குழந்தைகளும்  3  பெரியவர்களும் அடங்குவர்.  தொடர்ந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றிய  காவற்துறையினர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் என்ன காரணத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து காவற்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். அவஸ்ரேலியாவில்  கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

 

 

Four children and three adults were found shot dead (EPA)
Police near to the scene of a shooting at a house in Western Australia in which seven people have died 
Police Commissioner Chris Dawson addresses the media in Perth following the shooting (REUTERS)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More