Home இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்கு கோதபாயவே தகுதியானவர்…

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்கு கோதபாயவே தகுதியானவர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்கு கோதபாய ராஜபக்சவே தகுதியானவர் என முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். கொடகவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்கு கோதபாய ராஜபக்ச பொருத்தமானவர் என தாம் கூறியதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அந்த சந்தர்ப்பத்தில் பலர் அந்த முன்மொழிவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோதபாய கட்சியை வழிநடத்தியிருந்தால் இன்று கட்சி வெற்றிப்பாதையில் சென்றிருக்கும் எனவும் தடம் மாறியிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More