Home இலங்கை மண்ணெண்ணெய் மானியமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்

மண்ணெண்ணெய் மானியமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்

by admin

2018-05-10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலையில் மாற்;றம் ஏற்பட்டது. இதனால் குறைந்த வருமானம் பெறும் மின்சார வசதியற்ற குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணையில் இயங்கும் மீன்பிடி படகுகளை உபயோகிக்கும் மீனவர்களுக்கும் மண்ணெண்ணெயை மானியமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கேற்ப மண்ணெண்ணெய் மானிய கொடுப்பனவு தொகையை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவது தொடர்பாக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பான தகவல்களை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் என்பவற்றில் இருந்து பெறமுடியும். இந்த தகவலுக்கமைய மண்ணெண்ணெய் விலை மாற்றமடைந்த திகதியிலிருந்து மானிய நிதி வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More