Home இலங்கை அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்.

அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்ற பெண்ணின் ஆடையில் தீப்பற்றிக்கொண்டதால் உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு உள்ளாகி அவர் உயிரிழந்தார். இணுவில் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சீலன் அஸ்வினி (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 8 ஆம் திகதி மதியம் சமைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைக்க முயன்றார். ஏற்கனவே தீ அணையாது இருந்த அடுப்பை பற்ற வைக்க அதற்குள் இவர் மண்ணெண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் தீப்பற்றி யுவதியின் ஆடையில் பரவி எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீயில் எரிந்தவாறு அலறிய யுவதியை அயல் வீட்டில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

கடந்த ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யுவதி நேற்று முன்தினம் உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறினர்.

இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More