Home பிரதான செய்திகள் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான உலக அணியிலிருந்து அப்ரிடி விலகல்

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான உலக அணியிலிருந்து அப்ரிடி விலகல்

by admin

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான உலக அணியில் இருந்து பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர் ஷகிட் அப்ரிடி விலகியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் மரியா, இர்மா புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானங்களைப் புனரமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக குறித்த சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி நடைபெறவுள்ளது.  லோர்ட்ஸில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உலக அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் போட்டியிடவுள்ளன.

உலக அணியில் 38வயதான அப்ரிடி இடம்பிடித்திருந்த நிலையில் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என்பதனால் போட்டியில் பங்கேற்க இயலாது என தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளார். முழுமையாக குணமடைய மேலும் தனக்கு இன்னும் 3 முதல் 4 வாரங்கள் தேவை எனவும் முழுமையாக குணமடைந்து திரும்புவேன் என நம்புகிறேன் எனவும் அப்ரிடி தெரிவித்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More