Home இலங்கை “பொதுபல சேனாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை”

“பொதுபல சேனாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை”

by admin

ஜயம்மியத்துல் உலமாக்களிடம் சத்தியம் செய்தார் கோத்தாபய…

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம் மக்களின் பிரதான அமைப்பான ஜயம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர்களை சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் பிரதான சமயம் சம்பந்தமாகவும் முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள், தெல்தெனிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி நடந்த இந்த சந்திப்பில் ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி முப்தி,பொதுச் செயலாளர் எம்.எம். முபாரக் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய, பொதுபல சேனாவுக்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விமலஜோதி தேரரின் கோரிக்கைக்கு அந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலர் தவறாக புரிந்துக்கொண்டு உள்ளதாகவும் உண்மையில் பொதுபல சேனா அமைப்பு யாருடன் இருக்கின்றது என்பதை தற்போது அறிந்துக்கொள்ள கூடியதாக இருப்பதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.

அதேவேளை ஜம்மியத்துல் உலமாக அமைப்பின் தலைவர்கள் ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிளவுக தொடர்பில் கோத்தபாயவிடம் வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள கோத்தபாய, தமது குடும்பத்தினருடன் எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் தமது தந்தை கூறியது போல் குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும் வரை குடும்பத்தின் பலத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்ற அடிப்படையில் தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, அது குறித்து இதுவரை தான் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More