Home உலகம் சிலி நாட்டின் அனைத்து பேராயர்களும் பதவி விலகியுள்ளனர்

சிலி நாட்டின் அனைத்து பேராயர்களும் பதவி விலகியுள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிலி நாட்டின் அனைத்து பேராயர்களும் பதவி விலகியுள்ளனர். பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் அடிப்படையில் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.நாட்டில் பதவி வகித்து வந்த 34 பேராயர்களும் தங்களது பதவி விலகல் கடிதங்களை பாப்பாண்டவரிடம் சமர்ப்பித்துள்ளனர். எனினும், இந்த பதவி விலகல்களை பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது அறிவிக்கப்படவில்லை.

மேலும் பாதிக்கப்பட்டவர்களிடமும், தேவாலயத்திடமும் மன்னிப்பு கோருவதாக பேராயர்கள் தெரிவித்துள்ளனர். நாடொன்றின் அனைத்து ரோமன் கத்தோலிக்க பேராயர்களும் தங்களது பதவி விலகியுள்ளமை இதுவே வரலாற்றில் முதல் தடவையாகும்

அருட்தந்தையொருவர் மேற்கொண்ட பாலியல் குற்றச் செயலை மறைத்த ஒருவருக்கு சிலி நாட்டில் பேராயர் பதவி வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தமக்கு வேதனையையும் கவலையையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More