Home இலங்கை வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கிய நபரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் காவல்துறையினரும் கோப்பாய் காவல்துறையினரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.கொக்குவில் முதலி கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் என யாழ்ப்பாணம் காவல்துறையினர் சமர்ப்பணம் செய்தனர்.

சந்தேகநபருக்கு நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புள்ளது என்று கோப்பாய் காவல்துறையினர் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.’இருவேறு சம்பவங்களுடனும் சந்தேகநபருக்கு தொடர்புடையவர் என்று எவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்?’ என மன்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு காவல்துறையினர் உரியவாறு பதிலளிக்கத் தவறியதால், சந்தேநபரை ஆள் பிணையில் விடுவிக்குமாறு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

நீ்ர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்து கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 23 வயது இளைஞன், நேற்று (21) திங்கட்கிழமை தாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு பொலிஸ் குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று (22) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போதே பிணை வழங்கி நீதிமன்று உத்தரவிட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More