Home இந்தியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு தடை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு தடை

by admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துமிருந்தனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராசிரியை பாத்திமா தொடர்ந்திருந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது பிரிவு அனுமதி பெறப்பட்ட இடத்தில் ஆரம்பிக்கப்படாமையினால் விரிவாக்கப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். அத்துடன் ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை எனவும் அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். அத்துடன் ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More