Home இலங்கை மடு திருத்தல பகுதியில் 300 வீடுகள் அமைப்பது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்

மடு திருத்தல பகுதியில் 300 வீடுகள் அமைப்பது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தல பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை(23) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர் மட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது மடு திருத்தள பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை,கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.குணவர்தன,சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர்,இந்திய துணைத்தூதரகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் டி.சி.மஞ்சுநாத்,மடு பிரதேசச் செயலாளர் வி.ஜெயகரன்,மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொசன் குரூஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த உயர் மட்ட கலந்துரையாடலின் போது இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

-அதனைத்தொடர்ந்து 300 வீடுகள் அமைக்கப்படவுள்ள இடத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையிலான குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இறுதியாக குறித்த வீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் எதிர் வரும் யூன் மாதம் 1 ஆம் திகதி அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆம்பிப்பதாகவும்,அதற்கான துரித நடவடிக்கைகளை உரிய திணைக்களங்கள் முன் னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More