Home உலகம் ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்துள்ளனர் – சர்வதேச மன்னிப்புசபை

ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்துள்ளனர் – சர்வதேச மன்னிப்புசபை

by admin

மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்டபோது, ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100 இந்துக்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்புசபை குற்றம் சுமத்தி உள்ளது. ராக்கைன் மாகாணத்தில் அதிகளவில் வசித்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தநிலையில் அரகன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆர்மி என்ற அமைப்பு ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்த அமைப்பினர் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகள், சொத்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மேலும் சுமார் 7 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறி, பங்களாதேசில் தஞ்சமடைந்தனர். அங்கு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச மன்னிப்புசபை கலவரம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தியதுடன் கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. ஆதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் ‘கடந்த 2017 ஓகஸ்ட் 25-ம் திகதி ராக்கைன் மாகாணத்தின் வடக்கு மவுங்டாவுக்குட்பட்ட கா மவுங் சீக் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது குறித்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் எனவும் குறிப்பாக ஆண், பெண், குழந்தைகள் என மொத்தம் 69 பேரை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

அவர்களில் 53 பேர் கொல்லப்பட்டனர் எனவும் அதே நாளில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 46 இந்துக்கள் காணாமல் போய் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More