Home இலங்கை சட்ட விரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் – நடவடிக்கை எடுக்குமாறு யாழ் நீதவான் உத்தரவு

சட்ட விரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் – நடவடிக்கை எடுக்குமாறு யாழ் நீதவான் உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு ஓழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து முன்னெடுக்கவுள்ளனர்.

ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் காவல்துறையினரின் சேவையையும் பெற்றுக்கொள்ளவேண்டும். யாழ்ப்பாணம் காவல்துறையினரின்; உதவியைப் பெற்று இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நீதிமன்று அனுமதி வழங்கவேண்டும்’ என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (23) புதன்கிழமை விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்குவதாகக் கட்டளை வழங்கினார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் நல்லூர் பிரதேசம் உட்பட பல பகுதிகளில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More