Home இலங்கை மரண அச்சுறுத்தல் – கப்பம் கோரல் – கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு – ஒருவர் கைது…

மரண அச்சுறுத்தல் – கப்பம் கோரல் – கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு – ஒருவர் கைது…

by admin

மரண அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் பணக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பேலியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேலியகொட பிரதேசத்தில் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 10 இலட்சம் ரூபா பணத்தை பலாத்காரமாக பெற்றுக் கொள்ள முயற்சித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக பேலியகொட காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் செய்த விசாரணையில் சந்தேகநபர் பேதியாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பேலியகொட பேதியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பதுடன், அவர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More