பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர் நிக் கிர்ஜியோஸ் விலகியுள்ளார். முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இவ்வாறு விலகியுள்ளார்.
நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியிருந்த செம்மண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் தொடரில் நிக் கிர்ஜியோஸ் விளையாடுவதை உறுதி செய்து இருந்த நிலையில் தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
Spread the love
Add Comment