Home இலங்கை மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கம்

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – -மன்னார் –

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை(31) மதியம் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம் பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.மஜீத்,இளைஞர் சேவை அதிகாரிகள்,உதவி இளைஞர் சேவை அதிகாரிகள் உற்பட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினர் கடந்த வருடம்,மற்றும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இளைஞர் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

-குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,மாந்தை மேற்கு,முசலி,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்ட 153 இளைஞர் கழகங்களினுடாக முன்னெடுக்கப்பட்டு வரும்,இளைஞர் வேலைத்திட்டம்,கிராம அபிவிருத்தி திட்டங்கள் கறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் 2018 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டக் காரியாலயத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விபரங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More