Home உலகம் சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை

by admin


சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர் என்பவர் சமூக வலைத்தளத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அபுதாபி நீதிமன்றம் ; மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கௌரவத்தையும், அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி விட்டதாக தெரிவித்து நேற்றையதினம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மன்சூருக்கு 1 மில்லியன் திர்ஹாம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More