Home இலங்கை மன்னாரில் 5 ஆவது நாளாகவும் மனித எலும்புகளை தேடி அகழ்வு

மன்னாரில் 5 ஆவது நாளாகவும் மனித எலும்புகளை தேடி அகழ்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களிலும் 5 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை(1) காலை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில மனித எலும்புகள் மீட்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

கடந்த திங்கட்கிழமை காலை ஆரம்பிக்ப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் 5 ஆவது நாளாகவும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து செல்கின்றது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில், காலணி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அழ்வுகள் இடம் பெற்று வந்த போது மனித எலும்புகள்,பற்கள்,தடயப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் அகழ்வகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More