Home இலக்கியம் தெரு வழியெங்கும் வீதி நாடக நிகழ்வுகள்….

தெரு வழியெங்கும் வீதி நாடக நிகழ்வுகள்….

by admin

தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது…
……………………………………………………


கிளிநொச்சி நகரத்திலும் கிராமங்களிலும் பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களில் தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கலாலய நாடக குழுவினரின் நெறியாழ்கையில் “போதை தந்த பரிசு” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நாடகங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இவ் நாடக நிகழ்வுகளை கண்டு கழிப்பதற்காக  மக்கள் திரண்டு செல்வதுடன் போதை, பாலியல் மற்றும் தற்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப விழிப்புணர்வு நாடகங்களை நெறிப்படுத்தி செய்வதற்கு தமது ஆதரவுகளை தருவதாக குறித்த நாடகங்களை கண்டு கழிப்பதற்காக  செல்லும்  மக்கள் கூறியதாக தமிழ் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தமிழ் இளைஞர் பேரவையின் ஆய்வுத்துறை பொரறுப்பாளர் ச.கீதன் தமது அமைப்பினால் நடாத்தி வருகின்ற விழிப்புணர்வு வீதி நாடகங்களை குழப்பும் நோக்குடன் சிலர் செயற்பட்டு வருவதால் பல நெருக்கடிகளின் மத்தியில் தமது அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More