Home இலங்கை வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடல்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்துவருகின்றனர்.

அதற்கு உள்ளூர் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன் , நிபந்தனையற்று , உடனடியாக வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் யாழ். பண்ணைப்பகுதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More